
மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் தாழமுக்கம் காரணமாக மீன்கள் கரைகளில் வந்து குவிந்துள்ளன.
கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைந்துள்ளளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடல் பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மீன்கள் இவ்வாறு கரை ஒதுக்கியுள்ளது.