![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/fire.jpg?resize=650%2C433&ssl=1)
பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீ பரவலில் பொருட்களுக்கு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.