இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை!!

Essentials

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி கொடிகார தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button