இலங்கைசெய்திகள்

விரைவில் கல்வித் துறை சீராக்கப்படும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!!

EducationMinistry

கல்வித்துறையில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் விரைவில் அவை தீர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேற்படி குறைபாடுகள் சில குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூடியவை எனவும் மேலும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையிலேயே தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாடத்திட்டங்களை உரிய நேரத்தில் முடித்தல், பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துதல், பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுதல், பாடப்புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தாள் தட்டுப்பாடு காரணமாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button