இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் உயர்கல்விக்கடன் வழங்கத் தீர்மானம்!!

Education lone

 கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டமும் மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும் 3 இலட்சம் ரூபா கடன் திட்டமும்  மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கடன்களும் வட்டியின்றி வழங்கப்படவுள்ளதாகவும் 5000 மாணவர்களுக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதுவரை இலங்கை வங்கியில் மாத்திரம் வழங்கப்பட்ட இந்தக் கடனுதவிyயை, இனிவரும் காலங்களில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றின் ஊடாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இவை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button