இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்!!

Department of Examinations

ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சான்றிதழ்களுக்கு இணையம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேவையான சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அதிகளவான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் ஒருநாள் சேவை ஊடாக சான்றிதழ் வழங்கும் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button