இலங்கைசெய்திகள்

மண்முனை மேற்கு பிரதேச சபை ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!!

Demonstration

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபையில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகவும்,  அமைய அடிப்படையிலும் கடமைபுரியும் ஊழியர்கள்  வவுணதீவில் அமைந்துள்ள மண்முனை மேற்கு பிரதேச சபையின் முன்னால் புதன்கிழமை(01) தமக்கு வழங்கப்பட்ட தற்காலிக, அமைய அடிப்படையிலான நியமனத்தை நிரந்தரமாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச சபையில் 24  ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக நிரந்தர நியமனம் வழங்காமல் தற்காலிகமாக கடடையாற்றி வருகின்றனர் எனவே தமது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர், பிரமதம், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் முன்வர வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கால நீடிப்பு வேண்டாம், எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும், இந்த அரசை நாம் நம்புகின்றோம், இது எங்களது நியாயமான கோரிக்கை, காலநீடிப்பு வேண்டாம், எங்களுக்கான நிரந்தர நியமனத்தை தாருங்கள்  உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவிடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர். இந்த மகஜர் வழங்கும் நேரத்தில் பிரதேச சபை பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பிரசன்னமாயிருந்தனர்.

வ.சக்திவேல்

Related Articles

Leave a Reply

Back to top button