![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_20211201_083649.jpg?resize=708%2C398&ssl=1)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச சபையில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாகவும், அமைய அடிப்படையிலும் கடமைபுரியும் ஊழியர்கள் வவுணதீவில் அமைந்துள்ள மண்முனை மேற்கு பிரதேச சபையின் முன்னால் புதன்கிழமை(01) தமக்கு வழங்கப்பட்ட தற்காலிக, அமைய அடிப்படையிலான நியமனத்தை நிரந்தரமாக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_20211201_083748.jpg?resize=708%2C398&ssl=1)
மண்முனை மேற்கு பிரதேச சபையில் 24 ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக நிரந்தர நியமனம் வழங்காமல் தற்காலிகமாக கடடையாற்றி வருகின்றனர் எனவே தமது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர், பிரமதம், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் முன்வர வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_20211201_084101.jpg?resize=708%2C398&ssl=1)
கால நீடிப்பு வேண்டாம், எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும், இந்த அரசை நாம் நம்புகின்றோம், இது எங்களது நியாயமான கோரிக்கை, காலநீடிப்பு வேண்டாம், எங்களுக்கான நிரந்தர நியமனத்தை தாருங்கள் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_20211201_091838.jpg?resize=708%2C398&ssl=1)
இறுதியில் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவிடம் மகஜர் ஒன்றையும் சமர்ப்பித்தனர். இந்த மகஜர் வழங்கும் நேரத்தில் பிரதேச சபை பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பிரசன்னமாயிருந்தனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_20211201_092420.jpg?resize=708%2C398&ssl=1)
வ.சக்திவேல்