சினிமாசெய்திகள்

மேடையிலேயே உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர்!!

Death of playback singer

கேரளாவில் பிரபல பின்னணிப் பாடகர் எடவா பஷீர் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரபல பாடகரான இவர், ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் பங்கேற்று பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்திப் பாடலை ரசித்துப் பாடிக்கொண்டிருந்தார்.

அந்த பாடலைப் பாடி முடித்ததும் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எடவா பஷீரின் உடல் அவரது சொந்த ஊரான கொல்லம் கடப்பாக்கடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button