![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/Dead2_0.jpg?resize=708%2C471&ssl=1)
பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகத்தில் காயங்களுடனும், இரத்தக் கறையுடனும் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலத்திற்கு அருகில் உந்துருளியொன்றும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மரணம் விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.