இந்தியாசெய்திகள்

நச்சுப்புகையால் டெல்லியில் தாயும் 4 பிள்ளைகளும் பலி!!

death

இந்திய தலைநகர் டெல்லியில் குளிருக்காக பற்றவைத்த அடுப்பிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி 4 சிறுவர்களும் அவர்களின் தாயும் பலியாகி உள்ளனர்.

டெல்லியில் தற்போது கடும் குளிருடனான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில், டெல்லி சக்தாரா சீமபுரி என்ற இடத்தில் உள்ள தொடர்மாடி கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் 30 வயதான பெண்ணொருவர் இரு மகள்கள், இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

காலையில் அவர்களது வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்துப் அயலவர்கள் கதவைத் தட்டியுள்ளனர். எனினும், கதவு திறக்கப்படாததால் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணும் அவரின் நான்கு பிள்ளைகளும் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் அடைத்துவிட்டு குளிருக்கு தீ மூட்டிவிட்டு 5  பேரும் உறங்கியுள்ளதாகவும், அதிக நேரம் அடுப்பு எரிந்ததால் அதிலிருந்து எழுந்து நச்சுபுகை வெளியேற வழியில்லாமல் வீட்டிற்குள்ளேயே பரவியுள்ளதென்றும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஐவரும் உயிரிழந்துள்ளதாகவும்  காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button