இந்தியாசெய்திகள்

கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் பலி!

death

இன்று இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

புத்தாண்டையொட்டிஇவைஷ்ணவி தேவி கோயிலில் வழிபாடுகளுக்காக ஏராளமான பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி டெல்லி ஹரியானா ஜம்மு- காஷ்மீர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்த சம்பவத்தினால் 13 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்இ பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்இ “காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தமை வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 000 ரூபாவும் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button