![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/Dead2_0.jpg?resize=708%2C471&ssl=1)
இன்று மதியம் மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில்வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் இன்று காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வரும் நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.