இலங்கைசெய்திகள்

அமெரிக்க பிரஜை ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்பு!!

death

தங்காலை − நக்குனுகமுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, தீ காயங்களுடன் அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்றைய தினம் (15) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணொருவர் வழங்கிய தகவலை அடுத்தே, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர், அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதான பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் 2014ம் ஆண்டு முதல் தங்காலை பகுதியில் தனது தாயுடன் தங்கியிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த நபரின் தாய் கடந்த 6 மாத காலமாக திக்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வசித்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்ம நபருக்கு பெண்ணொருவரே உணவு வழங்கி வந்துள்ளதாகவும், நேற்றைய தினம் உணவு வழங்க வந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்த நிலையில் இருப்பதை அவதானிதுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உணவு வழங்க வருகைத் தந்த பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Back to top button