![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/02/23-63f6f4c004834.jpeg?resize=600%2C400&ssl=1)
சிறந்த பெறுபேறு பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயர்தர மாணவன் விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார்.
இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
போருக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர் பகுதியில் தற்கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மோசமாக அதிகரித்துள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.