இலங்கைசெய்திகள்

சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!!

death

கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது.

இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர் விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் நீராடச்சென்ற மாணவனே நேற்று(02) மாலை கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Related Articles

Leave a Reply

Back to top button