இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பப்ஜியால் பறிபோனது மாணவனின் உயிர்!!

Death

PUBG விளையாட்டில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. மாவடிவேம்பு பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு காத்திருந்த மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனது சாவிற்கு யாரும் காரணமில்லை, இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இந்த மாணவன் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இளையோர் மரணமடைவது தற்போது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது எனவும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button