இலங்கைசெய்திகள்

சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!!

Death

நுவரெலியா – கந்தப்பளை, ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வீட்டு வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் போடப்பட்டிருந்த சேலையில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் இராஜமாணிக்கம் விசாந்தினி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

“தான் வீட்டிலில்லாத சந்தர்ப்பத்தில் சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தான் வந்து பார்த்த போது சிறுமியின் கழுத்து சேலையில் இறுகியிருந்ததை அவதானித்து அயலவர்களின் உதவியுடன் அவரை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும்” சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் இன்று காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹைபொரஸ்ட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button