![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/202201231242130053_Tamil_News_Pondicherry-NewsCurfew-in-Tamil-Nadu-Puduvai-borders_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (23) ஊரடங்கு அமுலாக்கப்படுகிறது.
ஒமைக்ரொன் வைரஸ் திரபு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன்கருதி தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 16 ஆம் திகதி ஊரடங்கு அமுலாக்கப்பட்டது.
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.