செய்திகள்விளையாட்டு

நாளை ஆரம்பமாகிறது ‘பொன் அணிகளின் போர்’!!

Cricket match

‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் பெப்ரவரி 24 ஆம் 25 ஆம் திகதிகளில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

1917ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி 106 ஆவது வருடமாக நடைபெறவுள்ளது.

அத்துடன் இரு அணிகளும் மோதும் ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 30ஆவது ஒருநாள் போட்டி மார்ச் 4ஆம் திகதியும் மூன்றாவது இருபது – 20 போட்டி மார்ச் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

போட்டிகள் தொடர்பாக பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் வட்டுக்கோட்டை நேற்றைய தினம் யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அதிபர் ருஷிரா குலசிங்கம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் ஏ.பி. திருமகன் அணி வீரர்கள் பயிற்றுவிப்பாளர்கள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இரண்டு அணிகளின் தலைவர்களாலும் வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button