செய்திகள்விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!!

Cricket

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஐ.சி.சி ஒருநாள் போட்டி ஒன்றில் ஒரு அணி பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது.

இதன்படி ஐ.சி.சி ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.

போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 162 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்துள்ளார்.

நெதர்லாந்து அணி 499 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button