இலங்கைசெய்திகள்

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவருக்கு கொரோனா!!

covid19

செய்தியாளர் கிஷோரன்

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள, கிணற்றில் குளிக்கச்சென்ற நிலையில் கிணற்று நீரினுள் மூழ்கி மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் கிராம மக்களின் முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (21) இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரது சடலத்தினை சுகாதார நடைமுறைகளை பேணி எரியூட்டுவதற்கு சுகாதாரபிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button