இலங்கை

கொரோனாத் தொற்றால் மேலும் 22 பேர் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு மரணமடைந்த 22 பேரில் 15 ஆண்களும், 7 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 19 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button