இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநாடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் தொண்டர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் ஏற்றிவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது 2022ஆம் ஆண்டுக்கான கட்சியின் கொள்கைப் பிரகடனம் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button