![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/IMG-20220704-WA0003.jpg?resize=526%2C526&ssl=1)
இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி வலையமைப்பான சிரச தொலைக்காட்சியில் சிங்கள மொழியில் நடாத்தப்பட்ட பாடகர்களுக்கான போட்டியில் மாபெரும் இறுதிப் போட்டியில் பண்டாரவளையை சேர்ந்த பிரநிர்ஷா தியாகராஜா ‘தி வாய்ஸ் டீன்ஸ் ஸ்ரீலங்கா 2022’ முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிங்கள மக்கள் ஒரு தமிழ் கலைஞருக்கு தனது அங்கீகாரத்தை வழங்கி மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். இசைக்கு மொழி இல்லை இசைக்கு இனவாதம் இல்லை என்பதனை முதல் முறை உணர்த்தி தமிழர் நமக்கு நம்பிக்கைத் துளிரை வெளிக்காட்டியுள்ளனர். சகோதரியின் திறமைக்கும் அதனை இனவாதம் அற்று அங்கீகரித்து மகுடம் சூட்டிய நாட்டு மக்களுக்கும் வாய்ப்பினை வழங்கிய சிரச ஊடகத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
தகவல் _ பிரபா அன்பு