இலங்கைசெய்திகள்

கொழும்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

Colombo

வெள்ளவத்தை கடற்பகுதியில் முதலைகள் நடமாடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி , வெள்ளவத்தை கடற்பகுதியில் 40 முதலைகள் சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கின்ரோஸ் உயிர்காக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் திவங்க பெர்னாண்டோ என்பவர் வெள்ளவத்தை கடலில் நீராடும் போது முதலை குட்டியொன்றை பிடித்துள்ளார்.

குறித்த முதலைக் குட்டியை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த முதலை அச்சுறுத்தல் குறித்து கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடலில் குளிப்பதும் ஆபத்தாக மாறியுள்ளது. மக்கள் அவமானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button