![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-62592d656a712.png?resize=708%2C371&ssl=1)
7வது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக வெளியேற்ற இளைஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவான “வி வோன்ற் கோற்றா” என்ற பேரணியில் சென்ற நபர் ஒருவவே கடந்த இரண்டு நாட்களாக சந்தேகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வடை விற்பனை செய்துள்ளார்.
இளைஞர்கள் குழுவொன்று அவரை தாக்க முயற்சித்த போது மன்னிப்பு கோரிய இவர் அங்கு என்ன செய்து வந்தார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.