இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்-வெளியானது விஷேட வர்த்தமானி!!

colombo

கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்ற வளாகங்கள், சட்ட மா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் காவல்துறை தலைமையகம் என்பன அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அகுரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம், கொம்பனித் தெரு விமானப்படை தலைமையகம், பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்ல பிரதேசம் என்பன அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button