![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-62f3510eee598.jpeg?resize=600%2C400&ssl=1)
காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளதாகப் போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர், காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது எனவும் நகரங்களிலும் வட்டார அளவிலும் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்