இலங்கைசெய்திகள்

மக்கள் வங்கியின் கோரிக்கையை நிறைவேற்றிய சீனா

கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கியை சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் நீக்கியுள்ளது. கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சீனா இணைத்தது.

இந்நிலையில் கடன் பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு மக்கள் வங்கி அறிவித்திருந்தது.

அத்தோடு இன்றைய தினத்திற்குள் குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிட்டிருந்தது.  

Related Articles

Leave a Reply

Back to top button