மீண்டும் நாடு முடக்கப்படுமா- இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!!
Channa Jayasumana
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/71d94977-5a5e5e9a-bd7c3924-channa-jayasumana-_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை முடக்குவதற்கான தேவையில்லை.
கொவிட்-19 பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,287 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 617, 189 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 550 பேர் குணமடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580, 770ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 28 பேர் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், தொற்றுறுதியான 20, 847 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.