இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் நாடு முடக்கப்படுமா- இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!!

Channa Jayasumana

தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை முடக்குவதற்கான தேவையில்லை.

கொவிட்-19 பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும்  இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,287 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 617, 189 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 550 பேர் குணமடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580, 770ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 28 பேர் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், தொற்றுறுதியான 20, 847 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button