![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/11-8.jpg?resize=545%2C345&ssl=1)
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் இன்று நண்பகல் முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதைக் கண்டித்தும் மின்சார சபையில் நிலவும் வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவிக்கையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் வரை இப்போராட்டம் தொடரும் எனத்தெரிவித்துள்ளார்.