செய்திகள்பொருளாதார செய்திகள்
இலங்கையில் தனியார் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
Central Bank of Sri Lanka

அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலானது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராலேயே வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மத்திய வங்கிக்கு வாராந்த அடிப்படையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலானது மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 29ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.