![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/download-9-3.jpeg?resize=299%2C168&ssl=1)
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை கோரியுள்ளதுடன், அதிகாரிகளும் IMF பிரதிநிதிகளும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் உடனான ஒரு கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.