இலங்கைசெய்திகள்

அழகான அளவான கரோல் நிகழ்வு!!

Carol event

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த நத்தார் கரோல் ஆராதனை வைபவம் நேற்றைய தினம் 10 மணியளவில் கல்லூரியின் றொமைன் கூக் மண்டபத்தில் கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் ஸ்தாபக சபையான மெதடிஸ்த மிஷன் சபையின் குரு முதல்வர் வண.து.து.ஞானரூபன் அடிகளார் உட்பட யாழ் போதனா வைத்தியசாலையின் கத்தோலிக்க குரு வண பிதா ளு சுதர்சன் ஆகியோர் கலந்து நத்தார் வாழ்த்து செய்திகளை த் தெரிவித்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக இவ்வாறான ஆராதனை நிகழ்வு இடம்பெறவில்லை என்பதும்
தற்பொழுது இவ்வாறான நிகழ்வுகள் மிகவும் எளிமையாக பக்தி உணர்வுடன் இடம்பெறுவது மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்துவதாக அமைகின்றது
மாறன்
யாழ் நகர் ஐவின்ஸ் செய்தியாளர்

Related Articles

Leave a Reply

Back to top button