செய்திகள்புலச்செய்திகள்

தமிழ் தேசத்தை அங்கீகரிக்குமாறு கனடாவில் இன்று வாகனப்பேரணி!!

Canada

உலகம் தமிழ் தேசத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி இன்று சனிக்கிழமை மாபெரும் வாகனப் பேரணி ஒன்று கனடாவில் நடைபெறவுள்ளது.

இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஸ்கார்பரோ – மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பிலும் பிராம்டன் நகரசபைக்கு அருகிலும் வாகனப் பேரணிகள் ஆரம்பமாகும் என்று. அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தமிழர் உரிமைகளை மறுத்து தமிழ் தேசத்திற்கு எதிரான இன அழிப்பு போரை தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டன. இப்போது ஏற்பட்டிருக்கின்ற நிதி நெருக்கடியானது தமிழ் தேசிய பிரச்சினைக்கு இறுதியானதும் நீடித்ததுமான ஒரு தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு நடுவராக தலையிடுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button