இலங்கைசெய்திகள்

‘பட்ஜட்’ மீது இன்று இறுதி வாக்கெடுப்பு!!

budget

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை 7 நாட்கள் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்று, 22ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி 2ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 73 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்பின்னர் நவம்பர் 23ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை (மூன்றாம் வாசிப்பு) ஆரம்பமானது.

இன்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் பாதீட்டில் திருத்தங்கள் செய்ய இருப்பின் அவை தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார். அதன்பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button