இலங்கைசெய்திகள்

இனி எந்தப் பதவியையும் வகிக்கமாட்டேன் – புத்தகம் எழுதத் தீர்மானம் என்கிறார் பி.பீ ஜயசுந்தர!!

BP Jayasundera

“ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரச நிர்வாகத்தில் வேறு எந்த பதவியையும் வகிக்க மாட்டேன்.”

  • இவ்வாறு ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர, அப்பதவியில் இருந்து நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்.

இந்நிலையில் அவருக்கு அரச ஆலோசகர் அல்லது நிதி அமைச்சின் ஆலோசகர் பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு பின்பலத்திலேயே, இனி எந்தப் பதவியையும் வகிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய ஜனாதிபதிகளின் கீழ் நான் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். எனவே, ஓய்வுபெற்ற பின்னர் புத்தகமொன்றை எழுதவுள்ளேன்” எனவும் பிபீ ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button