இலங்கைசெய்திகள்

வவுனியாவில், ‘நீரிழிவு நோயும் யோகாசனமும்’ நூல் வெளியீட்டு விழா!!

Book Launching Ceremony

வவுனியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும், வைத்திய கலாநிதி திருமதி சரஸ்வதி பிரபாகரனின் நீரிழிவு நோயும் யோகாசனமும் என்னும் மருத்துவ நூல் வெளியீட்டு விழா, நாளை 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும்,இந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் கலந்துகொள்கிறார்.

விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தினை ஆசிரியை திருமதி த.சிவசோதி இசைக்க வரவேற்புரையினை ஆசிரியர் சபா.குகதாஸும் ஆசியுரையினை சிவஸ்ரீ நா.பிரபாகரக் குருக்களும் வாழ்த்துரையினை சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ப.சத்தியநாதனும் நிகழ்த்துவர்.தலைமையுரையினைத் தொடர்ந்து நூலின் வெளியீட்டுரையினை மனவளக் கலைத் துணைப் பேராசிரியர் அருள்நிதி எஸ்.சந்திரன் வழங்குவார்.நூலின் முதற் பிரதியினை வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்க்கற் உரிமையாளர் A.இராஜேந்திரன் பெற்றுக்கொள்ள, தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கல் இடம் பெறும். நூலின் ஆய்வுரையினை கலாபூசணம்,தமிழ்மணி மேழிக்குமரனும் சிறப்புரையினை விழாவின் சிறப்பதிதியும் ஏற்புரையினை, நன்றியுரையினை நூலாசிரியரும் வழங்குவர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button