செய்திகள்விளையாட்டு

வெற்றிபெற்ற மத்திய கல்லூரி வீரர்களுக்கு மாபெரும்  கௌரவிப்பும் வரவேற்பும்!!

Battle of the north

“வடக்கின் போர் ” என்று வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டியில் வெற்றியீட்டிய யாழ். மத்திய கல்லூரி மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு  கல்லூரிச் சமூகத்தினரால் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

காலை 8.00 மணியளவில் மத்திய கல்லூரியின் நட்புறவுப் பாடசாலையான யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் முன்றலில் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது. 

முன்னதாக, வெற்றி வீரர்களுக்கு வேம்படிச் சமூகமும் மத்திய கல்லூரி மாணவர்களுமாக கௌரவிப்பினை வழங்கினர்.

தொடர்ந்து பாடசாலைக்கு  வீதி உலாவாக அழைத்து வரப்பட்டு, ஊக்குவிப்பு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 

லண்டன் பழைய மாணவர் சங்கத்தினர் இந்த பரிசில்களை வழங்கி வைத்திருந்ததுடன் அதன் தலைவர்,  செயலாளர்  இந்த வெற்றி விழாவுக்கு நேரில் வருகை தந்து மாணவர்களை மகிழ்வித்தனர்.

தொடர்ந்து பாடசாலை முதல்வர் உரையாற்றினார்.

“தாம் ஓய்வு பெறவுள்ள இவ் வேளையில் மாணவர்கள் வேகத்துடனும் மிளிர்ச்சியுடனும் செயற்பட்டு தீரத்துடன் வெற்றியைப் பெற்றுத் தந்தமயைப் பாராட்டியதுடன், இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் தமது நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்தார்’.

Related Articles

Leave a Reply

Back to top button