![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/BIMSTEC-5.jpg?resize=708%2C354&ssl=1)
கொழும்பில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் தற்போது இலங்கை வந்துள்ள நிலையில்
இலங்கை, மேலதிக கடனை பங்களாதேஷிடம் கோரியுள்ளது.
மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கை கோரியுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இந்த கோரிக்கையை பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.