இலங்கைசெய்திகள்

யாழ் அன்பொளி கல்வியக பரிசளிப்பு விழா – 40 புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கு கௌரவம்!!

Award function

மறைந்த புலமைச்சிகரம் வே. அன்பழகனால் ஸ்தாபிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்களின் அறிவுக்கூடமாக விளங்கிய, சாதனையாளர்களின் உருவாக்க களமாக இருந்த அன்பொளி கல்விநிலையம் அவரின் திடீர் இறப்புடன் சற்று தளர்வடைந்து இருந்தாலும் மறைந்த நல்லாசானின் வழிதோன்றல் உதவ ஆசிரியர்களின் முயற்சினால் தொடர்ந்தும் சிறப்பாக இயங்கி வருகின்றது .


அங்கு தற்போது தரம் 5 மாணவர்களுக்கு பிரபல ஆசிரியர் திரு. பத்மநேசன் , திரு. தீபன் ஆகியோர் கற்பித்து சிறப்பான வழிகாட்டலை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 60 சதவீதமான மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

அத்துடன் சகல மாணவர்களும் 120 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று பிற்பகல் 3 மணிக்கு 70/4 அரசடி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள அன்பொளி கல்விநிலையத்தில் இடம்பெறுகின்றது.

.அனபொளி சமூகத்தின் வேண்டுதலின் பேரில் ஐவினஸ் தமிழ் தாயக கல்வி பொறுப்பாசியர் இ. ஜனதன் தலமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் திரு. திருமதி சு . தியாகலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றுவார்.

காலஞ்சென்ற திரு. அன்பழகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று என்பதும் அதனை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button