இலங்கைசெய்திகள்

நெல்லியடி சதுரங்க கழகத்தின் பரிசளிப்பு விழா!!

Award Ceremony

நெல்லியடி சதுரங்க கழகம் நடாத்திய 3ம் ஆண்டு நிறைவு விழா – கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு 16.04.2022 சனிக்கிழமை யா/ நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கத்தில் பி.ப 1.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ திரு. எம். ஏ. சுமந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர்- திரு. க. கிருஷ்ணகுமார் , நெல்லியடியின் பிரபல வர்த்தகரும் சமூகசேவையாளருமான திரு. சி. தயாபரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு. ச . சுகிர்தன், சட்டத்தரணி திருமதி. வைஷ்ணவி சண்முகநாதன், ஹரி கட்டட பொறியியல் நிறுவன உரிமையாளர் சோ. யாதவன், ஹரிந் எக்ஸ்பிரஷ் உரிமையாளர் திரு. இ. ரோசிஹரிந், சமூகஆர்வலர் கிரு. கி. சேயோன், பிரதேச சபை உறுப்பினர், சோழங்கள் விளையாட்டு கழக பிரதிநிதி செல்வன் ப. நிலாங்கதன், யாழ். மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் பிரதிநிதி செல்வன் உ. நிதர்சன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் ஶ்ரீ. ஜனார்த்தனன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கழக உறுப்பினர்களின் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் பலரும் மகிழ்வுடன் பரிசில் பெற்றுச் சென்றுள்ளனர். இளைய சமுதாயத்தின் இந்த முன்னுதாரணமான செயலை பலரும் பாராட்டியுள்ளனர். ஐவின்ஸ் தமிழ் இணையதளம் சார்பிலும் இவர்களுக்கு பாராட்டினைத் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button