செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர்ந்து அவுஸ்ரேலிய புகலிடம்கோரியவர் மரணம்!!

Australia

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசித்த

ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

48வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

இவர், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மேன்முறையீட்டு வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியநிலையிலேயே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார்.

 இவரது 25 வயது மகனும் மனைவியும் இலங்கையில் வசிக்கும் நிலையில் நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button