இலங்கைசெய்திகள்

மட்டுவில் தெற்கு வளர்மதி பாலர் முன்பள்ளியின் கலை விழா – 2022!!

Art event

மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளியின் கலைவிழா 31 .12.2022 சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு பெற்றோர் அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி த. தனுசியா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கள்வியங்காடு மக்கள் வங்கி முகாமையாளர் திரு. க. ஶ்ரீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, ஓய்வுநிலை அதிபரும் வளர்மதி நிலைய செயலாளருமான திரு. ச. கிருஷ்ணன்,மற்றும் வளர்மதி கல்விக்கழக முன்னாள் ஆசிரியையும் கனடா வாழ் அங்கத்தவர்களுமான திரு. திருமதி. சிறிகாந்தன் பொள்ளரியம் ஆகியோரும்

கௌரவ விருந்தினர்களாக மட்டுவில் முன்ப்ளி குடும்பத்தலைவி திருமதி . திருமதி . த. பிதாசினி மற்றும் வளர்மதி சனசமூக நிலையத்தலைவர் திரு. க. திவாகர் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

விருந்தினர் அழைப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கம் எனத் தொடர்ந்த நிகழ்வில் வரவேற்புரையினை, பெற்றோர் அபிவிருத்தி சங்கத்தலைவி திருமதி. ப. ஷார்த்திகா வழங்கினார். தொடர்ந்து தலைமையுரை, ஓய்வுநிலை அதிபர் திரு. த. அப்புத்துரை அவர்களின் ஆசியுரை என்பன இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் கௌரவிப்பு, பரிசில் வழங்கல், ஆசிரியர் கௌரவிப்பு , விருந்தினர்கள் உரை, பாலர்களின் கலைநிகழ்வுகள் போன்றன இடம்பெற்றது.

முன்னாள் பெற்றோர் அபிவிருத்திச் சங்கத்தலைவி திருமதி. மு. மஞ்சுளாவின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வுக் அனைத்தையும் நிலையப்பொறுப்பாளர் திரு. சி. பகிஷன் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Related Articles

Leave a Reply

Back to top button