இலங்கைசெய்திகள்

தமிழகம் செல்ல முயன்றவர்கள் மன்னாரில் கைது!!

arrested

இன்று அதிகாலை மன்னார் – தாழ்வுபாடு கடற்பரப்பில் தமிழகம் செல்லமுயன்ற 14பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்கலாக 12 நபர்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இரு படகோட்டிகளுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button