![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_poli-1.png?resize=708%2C333&ssl=1)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சீ.ஐ.டி எனக்கூறி தங்க நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரைக் கைது செய்துள்ளதுடன் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கார் மற்றும் கோடரிகள் கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் கைக்கப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பேரில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை (12) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 5ம் திகதி வெல்லாவெளியிலுள்ள வீடொன்றில் சீ.ஐ.டி எனக்கூறி இரண்டரைப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுவிட்டு தப்பியோடியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைக்கென வாடகைக்குப் பெற்றப்பட்ட காரே இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் நால்வர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர். கைதானவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_poli-2.png?resize=708%2C378&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_poli-4.png?resize=708%2C340&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_poli-5.png?resize=708%2C330&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Pho_poli-6.png?resize=708%2C326&ssl=1)
செய்தியாளர் – சக்தி