இலங்கைசெய்திகள்

ஆடைகளை திருடியவர் நையப்புடைக்கப்பட்டார்- வவுனியாவில் சம்பவம்!!

arrested

வவுனியாவில் ஆடைகளை திருடியவர் நையப்புடைக்கப்பட்டார். வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் ஆடைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்.
நேற்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஆடைகளைத் திருடியபோது கையும் மெய்யுமாக அகப்பட்டார். அவரைச் சுற்றிவளைத்த இளைஞர்கள் அவரது கைகளைக் கட்டி நையப்புடைத்ததுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்,
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். 
வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் வவுனியாவில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் கிஷோரன் 

Related Articles

Leave a Reply

Back to top button