இலங்கைசெய்திகள்

பணம் மற்றும் கை துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

arrested

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் பணம் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கடந்த 4ஆம் திகதி தெலிக்கடை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்தியது.

இதன்போது கைதான சந்தேகநபரிடம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்ததாகவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 9 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோனபீனுவல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button