இலங்கைசெய்திகள்

மட்டு.ஆரையம்பதி பகுதியில் பெண்ணொருவர் கைது!!

arrested

ஆரையம்பதி பகுதியில் பெருமளவு கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற தகவலொன்றை அடுத்து நேற்று(17) இரவு ஆரையம்பதி கண்ணகி அம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த காவல்துறையினர் அங்கிருந்து 15,000 மில்லிலீற்றர் கசிப்பைக் கைப்பற்றியதுடன் பெண்ணொருவரையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button