இலங்கைசெய்திகள்

வவுனியாவில் மரக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது!!

Arrested

சட்டவிரோதமான முறையில் காட்டினை அழித்து முதிரை மரக்குற்றிகளை கடத்திய ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பறயனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் முதிரை மரக்குற்றிகள் வெட்டப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதியில் இன்று (08.12) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளதுடன் சுமார் இரண்டு ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் இருந்த முதிரை மரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் அரசுக்கு சொந்தமான அந்த காணியினை அபகரிக்கும் நோக்குடன் கஜூ மரங்களையும் அங்கு நாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button